Saturday, January 26, 2013

அழிக ஜனநாயகம்! வாழ்க மதவாதம்! தமிழ் மணத்தின் உறுதி மொழி!

கட்டண சேவை என்கிற பெயரில் தமிழ் மணத்தின் தலையில் உட்கார்ந்து இருக்கும் http://www.puradsifm.com/viswaroopam/ புரட்சி எப்.எம் யின் இன்றைய கேவலமான மதவாத பதிவு,

விஸ்பரூபத்தில் விபரீதம் என்ன தான் இருக்கு? இதுதான் பதிவின் தலைப்பு. அடுத்தவர் துன்பப்படுவதை தம் மதத்தின் பெயரலால் நியாயப்படுத்துகிறாரோ அவர் புனிதரே அல்ல! புழுத்துப் போன செத்த பன்னிக்கு ஒப்பானவர்!  இனிமே எவனுமே வாய் தொறக்க கூடாது! காரணம், நாளை உங்களின் வாயில் இருந்தும் தீவிரவாதத்திற்கு எதிரான சொற் பிரயோகங்கள் வரலாம்!  அப்படி வந்தால், அடுத்த நிமிடம் உங்கள் வீட்டின் முன்பும் செம்மறிக் கூட்டங்கள்.

இதுவெல்லாம் முஸ்லிம்களை நோக்கி சொல்லப்படுபவை. செம்மறியாட்டு கூட்டம், புழுத்து போன பன்னி.  

அடுத்து நாட்டுக்கு தேவையான பெரிய ஒரு சமூக சிந்தனை படைத்த உறுதி மொழி வேறு எடுக்கிறார் நமது தமிழ் நாத்தத்தின் சாரி மணத்தின் தலையில் இருக்கும் புரட்சி  எப்.எம். அழிக ஜனநாயகம்! வாழ்க மதவாதம்! ஓங்குக மதத்தின் பெயரால் இடம் பெறும் வன் முறைகள்! ஒரு சமூக சிந்தனை இல்லாத வெறிபிடித்த, வக்கிரம் பிடித்த பதிபவர்கள் நிறைந்த ஒரு திரட்டிதான் தமிழ் நாத்தாம் சாரி! சாரி! தமிழ் மணம்.

தமிழ் நாத்தத்தில் இருந்து எல்லோரும் தமிழில் மணம் பரப்பும் சிறந்த திரட்டிகளான இன்டிலி, தமிழ் 10, தமிழ்வெளி, வலைபூக்கள், தேன்கூடு, உடான்ஸ், உழவன், தமிழன் திரட்டி போன்ற திரட்டிகளுக்கு மாறுவோம் அவர்களை ஆதரிப்போம். இந்த வக்கிரம் பிடித்த கூட்டம் மட்டும் அங்கே தனியக கிடந்தது ஒருவரை ஒருவர் தூற்றி கொண்டிருக்கட்டும். 

Thursday, January 24, 2013

தமிழ் மணத்தில் இன்றைய ஸ்பெஷல் தோசை!

தமிழில் மணம் பரப்புகிறோம் என்று சொல்லி நாத்தம் பரப்புகின்றனர். தமிழ் மக்களிடம் குரோதத்தை உண்டாக்குகின்றனர்.  மதவாத பதிவுகளுக்கு இடமில்லை, காப்பி பேஸ்ட் பதிவுக்கு இடமில்லை என்று சொல்வார்கள். 

ஆனால் இவர்களே பல மதவாத பதிவுகள் எழுதுபவர்களை ஆதரிப்பார்கள். பதிபவர்களை இரண்டு கூராக்கி ஒருவருக்கொருவர் மாற்றி கருத்துக்களை எழுதவைப்பார்கள். இவர்களே ஒரு குறிப்பிட்ட பதிபவர்களின் பதிவுகளை முன்னணிக்கு கொண்டு வருவார்கள். 

திரட்டி நடத்தினால் மற்ற திரட்டிகள் மாதிரி கருத்து சுதந்திரம் கொடுக்க வேண்டும். வெளிப்படையாக தாக்கி எழுதாமல் மறைமுகமாக ஒருத்தரை ஒருத்தர் தாக்கி எழுதும் பதிபவர்கள் கூட்டம் நிறைந்த சாக்கடைதான் தமிழ் மணம்.

தமிழ் மணத்தின் இன்றைய ஸ்பெசல் தோசை கமலஹாசனின் விஸ்வரூபம் திரைப்படம். இதை ஆதரித்து ஒரு கூட்டம் எதிர்த்து ஒரு கூட்டம் இவர்கள் அடித்து கொண்டு நாறும் நாற்றம் கணணியை தாண்டி மூக்கு வரைக்கும் வருகிறது. இன்றைய தமிழ் மணத்தின் முகப்பு பகுதி, முன்னணி இடுகை எல்லாமே விஸ்வரூபம். 

அது சரி மக்கள் பிரச்சனைகள், அதாவது தமிழக மீனவர்கள் படுகொலை, கூடங்குளம், காவேரி நதிநீர், தலித் மக்கள் மீதான வன்கொடுமை, டெல்டா விவசாயிகள் தற்கொலை இதை பற்றிய பதிவுகளுக்கு முக்கியத்துவம் இல்லை. தமிழ் மணம் திரட்டியினர். நல்லா வியாபாரம் பண்ணுறாங்க ஐயா! தமிழ் வாசகர்களும் தமிழ் மக்களும், பதிபவர்களும் தமிழ் மணம் திரட்டியை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்.