Thursday, January 24, 2013

தமிழ் மணத்தில் இன்றைய ஸ்பெஷல் தோசை!

தமிழில் மணம் பரப்புகிறோம் என்று சொல்லி நாத்தம் பரப்புகின்றனர். தமிழ் மக்களிடம் குரோதத்தை உண்டாக்குகின்றனர்.  மதவாத பதிவுகளுக்கு இடமில்லை, காப்பி பேஸ்ட் பதிவுக்கு இடமில்லை என்று சொல்வார்கள். 

ஆனால் இவர்களே பல மதவாத பதிவுகள் எழுதுபவர்களை ஆதரிப்பார்கள். பதிபவர்களை இரண்டு கூராக்கி ஒருவருக்கொருவர் மாற்றி கருத்துக்களை எழுதவைப்பார்கள். இவர்களே ஒரு குறிப்பிட்ட பதிபவர்களின் பதிவுகளை முன்னணிக்கு கொண்டு வருவார்கள். 

திரட்டி நடத்தினால் மற்ற திரட்டிகள் மாதிரி கருத்து சுதந்திரம் கொடுக்க வேண்டும். வெளிப்படையாக தாக்கி எழுதாமல் மறைமுகமாக ஒருத்தரை ஒருத்தர் தாக்கி எழுதும் பதிபவர்கள் கூட்டம் நிறைந்த சாக்கடைதான் தமிழ் மணம்.

தமிழ் மணத்தின் இன்றைய ஸ்பெசல் தோசை கமலஹாசனின் விஸ்வரூபம் திரைப்படம். இதை ஆதரித்து ஒரு கூட்டம் எதிர்த்து ஒரு கூட்டம் இவர்கள் அடித்து கொண்டு நாறும் நாற்றம் கணணியை தாண்டி மூக்கு வரைக்கும் வருகிறது. இன்றைய தமிழ் மணத்தின் முகப்பு பகுதி, முன்னணி இடுகை எல்லாமே விஸ்வரூபம். 

அது சரி மக்கள் பிரச்சனைகள், அதாவது தமிழக மீனவர்கள் படுகொலை, கூடங்குளம், காவேரி நதிநீர், தலித் மக்கள் மீதான வன்கொடுமை, டெல்டா விவசாயிகள் தற்கொலை இதை பற்றிய பதிவுகளுக்கு முக்கியத்துவம் இல்லை. தமிழ் மணம் திரட்டியினர். நல்லா வியாபாரம் பண்ணுறாங்க ஐயா! தமிழ் வாசகர்களும் தமிழ் மக்களும், பதிபவர்களும் தமிழ் மணம் திரட்டியை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும். 


No comments: